மகாராஷ்டிரா முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்றார்
மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார்
Nov 29, 2019, 00:23 IST
| மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றுக் கொண்டார். மும்பை தாதர் சிவாஜி பூங்கா மைதானத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தவ் தாக்கரேவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதனைத்தொடர்ந்து, அமைச்சர்களும் பதவியேற்று வருகின்றனர்.
பதவியேற்பு விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
newstm.in
newstm.in