நாளை இந்தியா வருகிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தியா வரும் இலங்கை அதிபர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கவுள்ளார்.
Nov 28, 2019, 02:50 IST
| இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மூன்று நாள் அரசு முறை பயணமாக நாளை இந்தியா வருகிறார். இந்தியா வரும் இலங்கை அதிபர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்கவுள்ளார்.
முன்னதாக, சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக கோத்தபய ராஜபக்சேவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமரின் சார்பில் இந்தியா வருமாறு அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in