பிரதமர் நரேந்திர மாேடியின் வெளிநாட்டு பயணத் திட்டம் வெளியானது
நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மாேடி, இம்மாதம், 8 மற்றும் 9ஆம் தேதிகளில், இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். மாலத்தீவு பார்லிமென்ட்டில் உரையாற்றவுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜ அதிக இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து, பிரதமர் நரேந்திர மாேடி, நாட்டின் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுள்ளார். இரண்டாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ள அவர், தனது இரண்டாவது ஐந்தாண்டு கால ஆட்சியில் முதல் வெளிநாட்டு பயணத்தை திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து, வெளியுறவுத்துறை செயலர், விஜய் கோகலே கூறுகையில், ‛‛பிரதமர் நரேந்திர மாேடி, வரும். 8 மற்றும் 9ஆம் தேதிகளில், இலங்கை மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக செல்கிறார். அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சு நடத்தும் அவர், மாலத்தீவு பார்லிமென்ட்டில் சிறப்புரையாற்ற உள்ளார்’’ என அவர் கூறினார்.
newstm.in
newstm.in