அகமதாபாத்தில் வாக்களித்தார் மோடி !
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தமது வாக்கினை பதிவு செய்தார்.
அகமதாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ராணிப்பில் உள்ள நிஸான் மேல்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில், இன்று காலை சரியாக 8:24 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது வாக்குச்சாவடி மையத்தில், பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
முன்னதாக, காந்தி நகரில் உள்ள தமது இல்லத்தில், தன் தாயாரிடம் ஆசி பெற்ற மோடி. அங்கிருந்து ஜீப்பில் பயணித்து அகமதாபாத் வந்தடைந்தார். அங்கு அவரை பாஜக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது, அங்கிருந்த அமித் ஷாவின் பேத்தியை தூக்கிக் கொண்ட மோடி, அக்குழந்தையை பரிவுடன் கொஞ்சினார்.
newstm.in
newstm.in