Logo

மக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது !

இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் களம் காணும் மெயின்புரி உள்பட மொத்தம் 116 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 | 

மக்களவைத் தேர்தல் : மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது !

கேரளம், கர்நாடகம், குஜராத் உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில், மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா போட்டியிடும் காந்தி நகர், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவ் களம் காணும் மெயின்புரி உள்பட மொத்தம் 116 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

மேலும், காங்கிரஸ்  மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் உள்ளிட்டோரும் இன்றைய தேர்தல் போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

இதில், கேரள மாநிலத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கும், குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒடிஸா மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன், 4 கட்டங்களாக நடைபெற்று வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்று 42 பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து அங்கு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

முன்னதாக, முதல்கட்டமாக ஏப்ரல் 11 -ஆம் தேதி  91 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18 -ஆம் தேதி இரண்டாம்கட்டமாக  95 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

இன்றைய மூன்றாம்கட்ட தேர்தலுடன் தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட 5 தென்மாநிலங்களில் வாக்குப்பதிவு முழுமையாக நிறைவடைகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP