ஜெய்பால் ரெட்டி மறைவு: சோனியா காந்தி, மன்மோகன்சிங் இரங்கல்
முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
Jul 28, 2019, 22:45 IST
| முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
‘மக்களுக்கு சேவை செய்வதையே தனது விருப்பமாக கொண்டவர் ஜெய்பால் ரெட்டி. அவரை இழந்துவாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், ஜெய்பால் ரெட்டி மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அறிவின் பொக்கிஷமாக விளங்கியவர் ஜெய்பால் ரெட்டி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77.
newstm.in
newstm.in