முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் சந்திரபாபு நாயுடு?
ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
May 23, 2019, 18:26 IST
| ஆந்திர மாநில முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு இன்று ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் தெலுகு தேசம் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை சந்திரபாபு நாயுடு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் ஜெகன்மோகனின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 149 இடங்களிலும், தெலுகு தேசம் கட்சி 25 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. நடிகர் பவன்கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.
newstm.in
newstm.in