Logo

குவைத் பிரதமரை சந்தித்தார் மத்திய அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ்

வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (அக்.31) குவைத் நாட்டின் ஆட்சியாளரையும், பிரதமரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தியா-குவைத் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
 | 

குவைத் பிரதமரை சந்தித்தார் மத்திய அமைச்சர்  சுஷ்மா ஸ்வராஜ்

வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (அக்.31) குவைத் நாட்டின் ஆட்சியாளரையும், பிரதமரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நான்கு நாட்கள் அரசுமுறைப் பயணமாக கத்தார், குவைத் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார். கத்தார் பயணத்தை நிறைவுசெய்த சுஷ்மா ஸ்வராஜ், நேற்று குவைத் நாட்டின் ஆட்சியாளர் ஷேக் சபாஹ் அல்-அஹமத் அல்-ஜாபெர் அல்-சபா மற்றும் பிரதமர் ஷேக் ஜபார் அல் முபாரல் அல் ஹமாத் அல் சபா ஆகியோரை தனித்தனியாக சந்தித்து இந்தியா-குவைத் நாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

குவைத்தில் வாழும் சுமார் 8 லட்சம் இந்தியர்களின் நலன் மற்றும் இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்புத்துறை கூட்டுறவு தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தினார்.   இந்த சந்திப்புக்கு பின்னர் சுஷ்மா தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP