நாட்டின் மிக இளவயது முதல்வர் இரண்டாவது முறையாக பொறுப்பேற்பு!
அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பதவியேற்றார் பெமா கண்டு. அவருக்கு அம்மாநில ஆளுநர் பி.டி.மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. மொத்தமுள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில் பாஜக 41 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக பெமா கண்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தின் முதல்வராக இரண்டாவது முறையாக இன்று அவர் பதவியேற்றார். அவருக்கு அம்மாநில ஆளுநர் பி.டி.மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கடந்த முறை ஆட்சி செய்தபோதே, பெமா கண்டு மிக இளம் வயது முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தற்போதும் அந்த பெருமை அவரிடமே உள்ளது. பெமா கண்டு வயது 37 என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in