Logo

தேசத்தை விட உலககோப்பை முக்கியமில்லை- ஹர்பஜன்சிங்

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் கூறி உள்ளனர். புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்துள்ளது.
 | 

தேசத்தை விட உலககோப்பை முக்கியமில்லை- ஹர்பஜன்சிங்

தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் கூறி உள்ளனர்.

புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த வேண்டும் என்ற வலியுறுத்தல் அதிகரித்துள்ளது. பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாட கூடாது என ஹர்பஜன் சிங் மற்றும் அசாருதீன் வலியுறுத்தியுள்ளனர்.  
 
2019 உலகக் கோப்பை போட்டியில் ஜுன் 16 அன்று இங்கிலாந்தின் மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இப்போட்டியில் விளையாடுவது தொடர்பாக இந்தியா பரிசீலனை செய்ய வேண்டும்.  இந்தியாதான் முதலில், பின்னர்தான் விளையாட்டு என கூறியுள்ளார் ஹர்பஜன் சிங்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹர்பஜன் சிங் ஒரு கிரிக்கெட் வீரராக தேசத்தைவிட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முக்கியமானதாக பார்க்கவில்லை. முதலில் நாம் இந்தியர்கள், பின்னர்தான் நாம் கிரிக்கெட் வீரர்கள். தேசத்தால்தான் நாம் இப்போது இந்நிலையில் உள்ளோம். இந்தியாவிற்காக நாம் விளையாடுவதால் மக்கள் நம்மை நேசிக்கிறார்கள் என கூறியுள்ளார். 

பாகிஸ்தான் உடனான இருதரப்பு போட்டியை புறக்கணித்த இந்தியா, உலக கோப்பையிலும் விளையாடக்கூடாது.  இருதரப்பு போட்டிகளில் விளையாடவில்லை என்றால், மற்ற பகுதிகளிலும் விளையாடமலே இருக்கலாம். ஹர்பஜன் சிங் பேச்சை நான் ஆதரிக்கிறேன். தேசத்தைவிடவும் உலக கோப்பை முக்கியமானதாக இருக்க முடியாது என அசாருதீன் கூறியுள்ளார். 
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP