‘புல்புல்’ புயல் கரையை கடந்தது
வங்கக்கடலில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே நள்ளிரவில் கரையை கடந்தது.
Nov 10, 2019, 14:40 IST
| வங்கக்கடலில் உருவான புல்புல் புயல் மேற்கு வங்கம், வங்கதேசம் இடையே நள்ளிரவில் கரையை கடந்தது.
மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்கதேசத்தின் கெப்பு புரா இடையே புல்புல் புயல் கரையை கடந்தது. இந்த புயலின் காரணமாக மேற்கு வங்கம் மற்றும் ஒடிஷாவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும், புயலால் ஒடிஷா, மேற்கு வங்கத்தில் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்தன.
மேலும், புல்புல் புயல் காரணமாக கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் ரத்தானதால் 580-க்கும் மேற்பட்ட பயணிகள் தவித்து வருகின்றனர்.
newstm.in
newstm.in