Logo

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது: பிரதமர் மோடி ட்வீட்!

இலங்கையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
 | 

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது: பிரதமர் மோடி ட்வீட்!

இலங்கையில் இன்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு, இலங்கையில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்ற கொண்டிருந்த தேவாலயங்கள் மற்றும் சில நட்சத்திர விடுதிகள் என 6 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், 130 பேர் பலியானதாகவும், 350க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் மத்தியில் இந்த சம்பவம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இது காட்டுமிராண்டித்தனம். இந்த சம்பவத்தில் இருந்து மீண்டு வர இந்தியா, இலங்கைக்கு உறுதுணையாக இருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீண்டுவர இறைவனிடம் வேண்டுகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். 

 

newstm.in

இலங்கை குண்டுவெடிப்பு: பலி 100யைத் தாண்டியது; 300க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP