ரயில் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு இழப்பீடு: ரயில்வே அமைச்சர் !!
ரயில் தாமதமாக ரயில் நிலையம் வந்தடைந்தால் இழப்பீடு வழங்கும் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Oct 2, 2019, 13:15 IST
| ரயில் தாமதமாக ரயில் நிலையம் வந்தடைந்தால் இழப்பீடு வழங்கும் முறை முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில், ‘நியூ லக்னோ - டெல்லி இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும். அதன்படி, ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் வர தாமதமானால் 100 ரூபாயும், 2 மணி நேரத்திற்கு மேல் ரயில் வர தாமதமானால் 250 ரூபாயும் வழங்கப்படும்’ என்று ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
newstm.in
newstm.in