பொதுத்துறை வங்கிகள் மூடப்படாது: மத்திய நிதிச்செயலர் ராஜீவ்குமார்
பொதுத்துறை வங்கிகள் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது என மத்திய நிதிச்செயலர் ராஜீவ்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
Sep 25, 2019, 21:40 IST
| பொதுத்துறை வங்கிகள் எக்காரணம் கொண்டும் மூடப்படமாட்டாது என மத்திய நிதிச்செயலர் ராஜீவ்குமார் உறுதிபட தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி ஒரு சில பொதுத்துறை வங்கிகளை மூடவுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதிச்செயலர் ராஜீவ்குமார், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என தெரிவித்தார். மேலும் மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக சேவையை வழங்கும் வகையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் மூலதனங்களை செலுத்தி பலப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
Newstm.in
newstm.in