Logo

காவலர் வீர வணக்க நாளில் பிரதமர் மோடி மரியாதை

காவலர் வீர வணக்க நாளில் பிரதமர் மோடி மரியாதை
 | 

காவலர் வீர வணக்க நாளில் பிரதமர் மோடி மரியாதை

மறைந்த காவலர்களின் நினைவாக அனுசரிக்கப்படும் காவலர் வீர வணக்க நாளான இன்று பிரதமர் மோடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

1959-ம் ஆண்டு லடாக் பகுதியில் சீன படையினரால் கொல்லப்பட்ட காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. 
 
இதனையொட்டி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மறைந்த காவலர்களுக்கான நினைவு இடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜகவின் மூத்த தலைவரான அத்வானி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர்.

இதேபோல், தமிழகத்தில் சென்னை மற்றும் புதுச்சேரியிலும் காவலர் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். 21 குண்டுகள் முழங்க நடைபெற்ற இந்த காவலர் நினைவு நாள் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP