வெங்காய விலை உயர்வால் மக்கள் கடும் பாதிப்பு: கனிமொழி
வெங்காய விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
Nov 28, 2019, 19:19 IST
| வெங்காய விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய கனிமொழி, தமிழகம், டெல்லி, மும்பையில் ஒரு கிலோ வெங்காயம் 100ரூபாயை தாண்டி விற்கப்படுகிறது. கடும் விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியமான வெங்காயத்தை பாதுகாத்து வைக்காததால் விலை ஏற்றமடைந்துள்ளது. வெங்காய விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, இது தொடர்பாக அவையில் விவாதிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்தார்.
Newstm.in
newstm.in