டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கிக் குண்டுகளுடன் பிடிபட்ட நபரால் பரபரப்பு!
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட போது, துப்பாக்கிக் குண்டுகளுடன் ஒரு நபர் பிடிபட்டார். இவர் பீகார் மாநிலம் சம்பாரன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இதுதொடர்பாக அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவரிடமிருந்து காலிப்ரே வகை துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. துப்பாக்கி குண்டுகள் தொடர்பான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. ஆயுதத் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிக் குண்டுகளுடன் பிடிபட்ட நபரால் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
newstm.in
newstm.in