லடாக் ஆளுநராக மாத்தூர் பதவியேற்பு
லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்.
Oct 31, 2019, 14:23 IST
| லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் பதவியேற்றார்.
மத்திய அரசின் புதிய சட்டத்தின் படி நள்ளிரவு முதல் சட்டப்பேரவை அல்லாத தனி யூனியன் பிரதேசமாக லடாக் செயல்பட தொடங்கியது. இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக ராதாகிருஷ்ண மாத்தூர் இன்று பதவியேற்றுக் கொண்டார். லே பகுதியில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
Newstm.in
newstm.in