புரி அருகே கரையை கடந்தது ஃபனி புயல்!
ஒடிசா மாநிலம் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வடக்கு வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.
May 3, 2019, 16:29 IST
| ஒடிசா மாநிலம் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.
அதி தீவிர புயலான ஃபனி, கோபால்பூர் - சந்த்பாலி பகுதிகளுக்கு இடையே இன்று காலை கரையை கடக்கத் தொடங்கியது. இதனால் ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்று வீசியது. புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மணிக்கு 175 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அத்துடன் பல பகுதிகளில் கனமழையும் பெய்து வருகிறது.
இதையடுத்து, 10.40 மணியளவில் புரி அருகே ஃபனி புயல் கரையை கடந்தது. தொடர்ந்து இந்த புயல் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து செல்கிறது.
newstm.in
newstm.in