டெல்லி- 2 கோடியே 30 லட்ச ரூபாய் வெளிநாட்டு பணம் கடத்த முயன்றவர்கள் கைது
டெல்லி விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற 2 கோடியே 30 லட்ச ரூபாய் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
May 22, 2019, 17:00 IST
| டெல்லி விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற 2 கோடியே 30 லட்ச ரூபாய் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இந்தியர்கள் 3 பேர் பாங்காக் செல்வதற்காக விமான நிலையம் வந்தனர்.
அவர்களின் நடத்தையில் சந்தேகமடைந்த சுங்கத்துறையினர் அவர்களை தனியாக அழைத்து சென்று அவர்களது உடமைகளை சோதனை செய்தனர்.
அப்போது அவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2 கோடியே 30 லட்ச ரூபாய் நோட்டுகள் கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த 3 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in
newstm.in