Logo

ஐ.என்.எக்ஸ் வழக்கு: இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி!

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 | 

ஐ.என்.எக்ஸ் வழக்கு: இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற நீதிமன்றம் அனுமதி!

ஐ.என்.எக்ஸ் மீடியா மோசடி வழக்கில், இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் இந்தியாவில் ரூ.305 கோடிக்கு முதலீடு செய்ய அனுமதியளித்ததில் அப்போதைய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் 10 லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கியதாக அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. ப.சிதம்பரத்திடமும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அப்ரூவராக மாற விரும்புவதாக இந்திராணி முகர்ஜி கூறியதற்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

எனவே, இந்திராணி முகர்ஜி மூலமாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் செய்த முறைகேடுகள் குறித்து பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP