Logo

ராகுல் காந்தியை இன்று மீண்டும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று டெல்லியில் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 | 

ராகுல் காந்தியை இன்று மீண்டும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று மீண்டும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசி வருகிறார். மக்களவைத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டும் நிலையில், இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்டமான 7ம் கட்ட தேர்தல் இன்று(மே 19) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும், மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நேற்றும் இவர்களது சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 

ராகுல் காந்தியை இன்று மீண்டும் சந்தித்தார் சந்திரபாபு நாயுடு!

முன்னதாக, சந்திரபாபு நாயுடு அரவிந்த் கெஜ்ரிவால், சீதாராம் யெச்சூரி ஆகியோரை சந்தித்த பின்னர் நேற்று ராகுலை சந்தித்தார். பின்னர் சரத் பவார், மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்டோரையும் சந்தித்து பேசினார். இந்நிலையில் இன்று மீண்டும் ராகுலை சந்தித்து பேசி வருகிறார். 

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர், எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் மே 23ம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் குறித்தும் இருவரும் ஆலோசனை நடத்தலாம் என்று தெரிகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP