ஆதார் கார்டுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைக்க மத்திய அரசு உத்தரவு
ஆதார் கார்டுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைக்க மத்திய அரசு உத்தரவு.
Feb 8, 2018, 10:31 IST
| ஆதார் கார்டுடன் டிரைவிங் லைசென்ஸ் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, வங்கிக் கணக்கு, பான் எண், கேஸ் மானியம், உரம் மானியம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஆதார் எண்ணுடன் இணைப்பதை கட்டாயப்படுத்தியது. மேலும் மத்திய அரசின் 30-க்கும் மேற்பட்ட திட்டங்களை ஆதார் எண்ணுடன் இணைக்க அரசு கட்டாயமாக்கியது. இந்நிலையில் மத்திய அரசு டிரைவிங் லைசென்ஸ்டன் ஆதார் எண்ணை இணைக்க முடிவு செய்துள்ளது. இவ்வாறு இணைப்பதன் மூலம் போலி உரிமங்கள் உபயோகப்படுத்துவது முழுவதுமாக நிறுத்தப்படும். போலி வாகன ஓட்டுநர் உரிமம் மூலம் வாகனத்தை இயக்கி விபத்துக்குள்ளாகும் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அரசு இந்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in