Logo

'டிக்டாக்' செயலி தடைக்கு எதிரான வழக்கு 15ம் தேதி விசாரணை!

டிக்டாக் செயலிக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு வரும் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 | 

'டிக்டாக்' செயலி தடைக்கு எதிரான வழக்கு 15ம் தேதி விசாரணை!

'டிக்டாக்' செயலிக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு, வரும் 15ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த மனுவில், "டிக்டாக் செயலியை, இளைஞர்கள், குழந்தைகள், மாணவர்கள் அனைத்து தரப்பினரும் பயன்படுத்துவதால், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இதுவரை இந்த செயலியினால், 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் உள்ளது. மக்களுக்கு தீமையை இழைக்கும் இந்த டிக்டாக் செயலிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நாட்டில் பல்வேறு குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கும் டிக்டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என்றும் வரும் 16ம் தேதிக்குள் இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கினை நீதிபதிகள் அன்றைய தினத்திற்கு ஒத்திவைத்தனர். 

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை நேற்று ஏற்றுக்கொண்டுள்ளதாக கூறிய உச்சநீதிமன்றம், வழக்கை வரும் 15ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக இன்று தகவல் தெரிவித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP