Logo

மத்திய அரசுடன் மோதல் கூடாது: ரிசர்வ் வங்கிக்கு அருண் ஜேட்லி அறிவுரை

மத்திய அரசுக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் இருக்கவேண்டும் என்றும் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 | 

மத்திய அரசுடன் மோதல் கூடாது: ரிசர்வ் வங்கிக்கு அருண் ஜேட்லி அறிவுரை

மத்திய அரசுக்கு உதவும் வகையில் ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் இருக்கவேண்டும் என்றும் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளார். 

மத்திய அரசுக்கும், நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் காணப்பட்டு வருகிறது. சில திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கவேண்டும் என்றும், தன்னிடம் இருக்கும் நிதியை சற்று குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசு, ரிசர்வ் வங்கியை வற்புறுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் மத்திய அரசின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க நிபுணர் குழுவை நியமிக்கவும், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்குவதை எளிமையாக்கிடவும் ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

மத்திய அரசுடன் மோதல் கூடாது: ரிசர்வ் வங்கிக்கு அருண் ஜேட்லி அறிவுரை

இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நேற்று தனியார் தொலைக்காட்சி பேட்டியளித்த போது,  ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு உதவி செய்யும் விதமாக அமைந்திடவேண்டும் என்றும், மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கிக்கு அறிவுறுத்தியுள்ளார்.  மேலும், ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு உதவிடவேண்டும். எனவே தன்னிடம் எவ்வளவு நிதி இருப்பை கைவசம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவேண்டிய தருணம் இதுவாகும் எனவும் அருண் ஜேட்லி கூறினார். 

தன்னிடம் எப்போதுமே கையில் அதிக நிதி இருக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுவது தவறானது என்றும், மக்கள் கஷ்டப்படும் இக்கட்டான நேரங்களில் ரிசர்வ் வங்கி கையில் அதிகமாக பணம் வைத்திருக்கவேண்டும் கருதுவது தவறு என்றும் குறிப்பிட்ட அருண் ஜேட்லி ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு ஒரு போதும் அதன் விதிகளை மீறியதில்லை எனவும் சுட்டிக் காட்டினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP