மலையடிவாரத்தில் மாணவிக்கு நேர்ந்த துயரம்! ஆண் நண்பர்களால் வந்த வினை!
புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக 16 வயது சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் ஆரவல்லி மலைத்தொடர் அருகே உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அங்கு அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். அப்போது அங்கு வந்த ஷ்ரவன் குமார் (34), நிதேஷ் மிஸ்ரா (30) ஆகியோர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டனர். அதனை எதிர்த்த சிறுமியின் நண்பர்களை அவர்கள் அடித்து விரட்டினர்.
பின்னர், இருவரும் சிறுமியை மிரட்டி மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததை வீடியோவாகவும் எடுத்து வைத்துக் கொண்ட அவர்கள் இதனை வெளியே கூறினால், வீடியோ பதிவுகளை சமூக ஊடகங்களில் பதிவேற்றி விடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர். இந்நிலையில் வீடு திரும்பிய சிறுமியும், நண்பர்களும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி விசாரணை நடத்திய காவல் துறையினர் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
newstm.in
newstm.in