கர்நாடகத்தில் ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட மாட்டேன்: எடியூரப்பா பேட்டி
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டேன் என்று முன்னாள் முதல்வரும், கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Jun 1, 2019, 17:40 IST
| கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டேன் என்று முன்னாள் முதல்வரும், கர்நாடக பாஜக தலைவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து பெங்களூரு திரும்பியுள்ள எடியூரப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "டெல்லியிலிருந்து இப்பொழுது தான் திரும்பியுள்ளேன். கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் செய்ய வேண்டாம் என்று எங்கள் கட்சி தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். அதனால் அத்தகைய முயற்சியில் நான் ஒரு போதும் ஈடுபட மாட்டேன்" என்றார்.
newstm.in
newstm.in