வாட்ஸ்ஆப்பில் பிழை : கண்டறிந்த கேரள சிறுவனை கவுரவித்த பேஸ்புக்
கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் உடனடி செய்தி பரிமாற்ற தளமான வாட்ஸ்ஆப்பில் உள்ள பிழையை கண்டறிந்து கூறியதற்காக பேஸ்புக் நிறுவனத்தால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
Jun 6, 2019, 18:00 IST
| கேரளாவைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் உடனடி செய்தி பரிமாற்ற தளமான வாட்ஸ்ஆப்பில் உள்ள பிழையை கண்டறிந்து கூறியதற்காக பேஸ்புக் நிறுவனத்தால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவரான கே.எஸ். அனந்த்கிருஷ்ணன் இப்போது 94 பேர் இடம்பெற்றுள்ள பேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளார். அத்துடன் 500 டாலர் பரிசுத்தொகையையும் வென்றுள்ளார்.
newstm.in
newstm.in