உ.பி: டிராக்டர் மீது பேருந்து மோதி 5 பேர் பலி!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராகடர் டிராலி மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
May 18, 2019, 16:10 IST
| உத்தரப்பிரதேச மாநிலத்தில் டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ- ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் உன்னவ் மாவட்டத்தில், முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிராலி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 30 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களில் லக்னோ- ஆக்ரா விரைவு நெடுஞ்சாலையில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in