ராஜஸ்தானில் குஜ்ஜார் வகுப்பினரின் போராட்டம் தொடர்கிறது
ராஜஸ்தானில் குஜ்ஜார் வகுப்பினரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதனால் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
Feb 10, 2019, 17:05 IST
| ராஜஸ்தானில் குஜ்ஜார் வகுப்பினரின் போராட்டம் இன்றும் தொடர்கிறது. இதனால் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ராஜஸ்தானில் வாழும் குஜ்ஜார் வகுப்பினரின், தங்களுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதற்கான போராட்டத்தை அவர்கள் தொடங்கியுள்ளனர்.
சவாய் மதோப்பூர் மாவட்டத்தில் தண்டவாளங்களில் குடியேறும் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாளங்களில் கூடாரம் அமைத்து தங்கி அவர்கள் போராடி வருகின்றனர்.
இதன் காரணமாக அவ்வழியாக இயக்கப்படும் 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டும் வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in