காவல் துறையினரின் விசாரணையின் போது உயிரிழந்த மார்க்கெட்டிங் பிரதிநிதி!
மும்பை யில் மருந்து நிறுவனத்தில் பணிபுரியும் 25 வயதான மார்க்கெட்டிங் பிரதிநிதி விஜய் நாராயண் சிங், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஒரு தம்பதியினருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக கைதுசெய்யப்பட்டு. வடலா போலிஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அங்கு நடந்த விசாரணையின் போது மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவருடன் கைது செய்யப்பட்ட நன்பர் ஒருவர் நெஞ்சு வலிக்கிறது என விஜய் நாராயண் சிங், கூறியும், போலீசார் அவரை மருத்துவமனைக்கு அளித்து செல்லவில்லை என்றும், மயங்கி கீழே விழுந்த பிறகு வாடகை கார் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாகவும்.
மருத்துவமனைக்கு கொண்டுவர காலதாமதம் ஆனதன் காரணமாகவே விஜய் நாராயண் சிங்,உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in