மணமேடையிலேயே விளையாடிய மாப்பிள்ளை
திருமண நாளன்றும் இடைவிடாது பப்ஜி விளையாடிய புது மாப்பிள்ளையின் நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
May 2, 2019, 22:40 IST
|
திருமண நாளன்றும் மணமேடையில் இடைவிடாது பப்ஜி விளையாடிய புது மாப்பிள்ளையின் நடவடிக்கை அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக திருமணம் ஆன தம்பதினருக்கு வரேவற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது நிகழ்ச்சிக்கு வந்த உறவினர் ஒருவர் மாப்பிள்ளையிடம் பரிசு பொருட்களை கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த பரிசு பொருளை தள்ளி விட்டு மாப்பிள்ளை தனது செல்போனில் பப்ஜி விளையாடுகிறார். இதைப்பற்றி மாப்பிள்ளையிடம் உறவினர் கேட்ட போது, இது வாழ்வா, சாவா போராட்டம். இந்த விளையாட்டை பாதியில் நிறுத்த முடியாது என்று மாப்பிள்ளை கூறியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
newstm.in
newstm.in