Logo

குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கை- மாநில அரசு பரிசீலிக்க முடிவு

குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.
 | 

குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கை- மாநில அரசு பரிசீலிக்க முடிவு

குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.

கல்வி, வேலைவாய்ப்பில் குஜ்ஜார் சமூக மக்களுக்கு உரிய இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என ராஜஸ்தானில் நான்காவது நாளாக தொடர்ந்து குஜ்ஜார் சமூக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குஜ்ஜார் சமூகத்தினருக்கு ஆதரவாக ராஜஸ்தானில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தோல்பூர் நெடுஞ்சாலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த வந்த காவல்துறையினரும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் வெடித்தது. இந்த ஆத்திரத்தில் சிலர் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். 

இந்நிலையில் குஜ்ஜார் சமூக மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய மாநில அரசு முடிவுசெய்துள்ளதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP