காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்: உளவுத்துறை எச்சரிக்கை
காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து விமானப்படை தளங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Sep 25, 2019, 15:35 IST
| ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜெய்ஷ் இயக்க பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 8 முதல் 10 நபர்கள் ஜம்மு காஷ்மீர் விமானப்படை தளங்களில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையையடுத்து ஸ்ரீநகர், ஜம்மு, அவந்திபோரா, பதான்கோட், ஹிண்டன் ஆகிய விமானப்படை தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது.
Newstm.in
newstm.in