பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் திடீர் தீ விபத்து
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவுன்பூரில் உள்ள சராய் காவாஜா என்ற பகுதியில் பிஎஸ்என்எல் டவரில் திடீரென தீப்பிடித்தது.
May 13, 2019, 01:09 IST
| உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவுன்பூரில், சராய் காவாஜா என்ற பகுதியில், பிஎஸ்என்எல் டவரில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ அலுவலகத்திலும் பரவியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மின் கசிவால் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த தீவிபத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
newstm.in
newstm.in