உறவினர் என நம்பிச்சென்ற சிறுமியை சீரழித்த மாணவர்..
உறவினர் என நம்பிச்சென்ற சிறுமியை சீரழித்த மாணவர்..
Dec 12, 2019, 14:03 IST
| இமாச்சல பிரதேச மாநிலம் குளு மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது 10-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுவன் சிறுமியை வழிமறித்து வேறு வழியில் செல்லலாம் என்று அழைத்துச்சென்றுள்ளார். அவர் உறவினர் என்பதால் சிறுமியும் அவனை நம்பி உடன் சென்றுள்ளார். ஆனால், சிறுமியை தனியாக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று சிறுவன் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உனாவில் உள்ள சிறார் காப்பகத்தில் சிறுவனை காவல்துறையினர் அடைத்தனர்.
newstm.in