காஷ்மீரில் பயங்கரவாதிகளால் தீக்கிரையாக்கப்பட்ட பள்ளி !
நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில் இன்று காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு பயங்கரவாதிகள் தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Nov 2, 2019, 03:10 IST
| நாளை தேர்வு நடைபெற இருந்த நிலையில் இன்று காஷ்மீரில் உள்ள பள்ளிக்கு பயங்கரவாதிகள் தி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கும்ட்லான் கிராமத்தில் பயங்கரவாதிகளால் அரசு பள்ளி கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் நாளை ( சனிக்கிழமை) மாணவர்களுக்கான போர்டு தேர்வுகளை நடத்தவிருந்தது. இந்நிலையில் பள்ளி கட்டிடத்தின் மீது பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் பள்ளிக்கட்டிடம் சேதமடைந்துள்ளது.ஏற்கனவே கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் உள்ள பள்ளி ஒன்றை பயங்கரவாதிகள் எரித்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in