குடிபோதையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை நைய புடைத்த நோயாளியின் உறவினர்கள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடிபோதையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் நைய புடைத்தனர்.
Jun 29, 2019, 23:37 IST
| உத்தரப்பிரதேச மாநிலத்தில், குடிபோதையில் சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் நைய புடைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கன்ஞ் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்தவரை, அங்குள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு, அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக அழைத்து வந்திருந்தனர்.
அப்போது, குடிபோதையில் இருந்த மருத்துவர், சிகிச்சை அளிக்க மறுத்து நோயாளியின் உறவினர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளியின் உறவினர்கள், மருத்துவரை நைய புடைத்தனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமுக வலை தளங்களில் வைரலாகி உள்ளன.
newstm.in
newstm.in