புதுச்சேரி அரசு மருத்துவர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டம்!
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Jul 16, 2019, 14:25 IST
| மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து புதுச்சேரி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 2 மணி நேரம் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நோயாளியின் உறவினர்களால் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் தாக்கப்பட்டனர். இதனை கண்டித்து இன்று புதுச்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் 2 மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகதார நிலைய பணியாளர்களும் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in