Logo

மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஒரு பாஜக உறுப்பினர் கொலை - அதிர்ச்சியில் பாஜக

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் ஒரு பாஜக உறுப்பினரின் மரணம், மேற்கு வங்காள பாஜக உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 | 

மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஒரு பாஜக உறுப்பினர் கொலை - அதிர்ச்சியில் பாஜக

ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் குடும்பத்துடன் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் ஒரு பாஜக உறுப்பினரின் மரணம், மேற்கு வங்காள பாஜக உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த புதன்கிழமையன்று, ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் மிக கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அந்த அமைப்பின் உறுப்பினர்கள் மேற்கு வங்காளத்தில், குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்திருந்தனர்.

இதை தொடர்ந்து, தற்போது, பாஜக அமைப்பை சேர்ந்த 55 வயது உறுப்பினர் ஒருவர், கத்தியால் குத்தி கொல்லப்பட்டிருப்பது பாஜக உறுப்பினர்கள் மத்தியில் மீண்டும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டிருக்கும் பாஜக உறுப்பினர், மளிகை கடை வைத்திருந்ததாகவும், இரவு நேரம் கடை மூடும் நேரத்தில், இச்சம்பவம் நடந்தேறியுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் கூறிகின்றனர்.

இந்த கொலை சம்பவங்களுக்கு காரணம் மாநில அரசு தான் என்றும், மேற்கு வங்காளத்திலிருக்கும் பாஜக உறுப்பினர்களுக்கு, மாநில அரசால் அச்சுறுத்தல் இருப்பதாகவும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், மேற்கு வங்காள மாநில ஆட்சி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படியும், ஜனநாயக முறைப்படியும் தான் நடைபெறுகிறதா என்பதை மத்திய அரசு பரிசோதிக்க வேண்டிய தருணம் இது என்று ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP