ஜம்மு காஷ்மீரில் போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சபோர் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் போலீஸ் நிலையம் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.
Mar 21, 2019, 17:25 IST
| ஜம்மு காஷ்மீர் மாநிலம் சபோர் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் போலீஸ் நிலையம் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் இன்று காலை சபோர் மாவட்டத்தில் போலீஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
newstm.in
newstm.in