மாவோயிஸ்ட்கள் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்ட் மாநிலத்தில், மாவோயிஸ்ட்கள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Feb 24, 2019, 13:44 IST
| ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட்கள் இருவரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்ட்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இன்று அதிகாலை நடைபெற்ற இச்சண்டையில் மாவோயிஸ்ட்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டது. அவர்களிடமிருந்து இரண்டு ஏகே - 47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
newstm.in
newstm.in