குடியிருப்புக்குள் புகுந்த சிறுத்தையால் பரபரப்பு!
மும்பை அந்தேரிக்கு உட்பட்ட மரோல் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று காலை கருஞ்சிறுத்தை நுழைந்தது. அதனை அப்பகுதிவாசிகள் பீதியடைந்து தங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
Apr 1, 2019, 23:00 IST
| மும்பையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மும்பை மாநகரில் அந்தேரிக்கு உட்பட்ட மரோல் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இன்று காலை கருஞ்சிறுத்தை நுழைந்தது. குடியிருப்பு வளாகத்துக்குள் அங்கும் இங்கும் சுற்றிதிரிந்த சிறுத்தையை கண்டு, அப்பகுதிவாசிகள் பீதியடைந்து தங்களது வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.
தவலறிந்த போலீஸார் மற்றும் வனத்துறையினர், உட்லண்ட் கிரெஸ்ட் எனப்படும் அக்குடியிருப்பு பகுதிக்கு விரைந்து, சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
newstm.in
newstm.in