ஜம்மு காஷ்மீர்- அனந்தநாக் பகுதியில் நடந்து வரும் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பகுதியில் வெரிநாக் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்தினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்ற பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். உடனே அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். ப
திலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதையடுத்து அப்பகுதிக்கு கூடுதல் படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in