ஜம்மு-காஷ்மீர்: ராஜோரியில் பள்ளிகள் திறப்பு!
ஜம்மு- காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
Aug 19, 2019, 16:04 IST
| ஜம்மு- காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்தியா ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 5 ஆம் தேதி திறம்ப பெறப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை யூனியன் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பு கருதி ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் 144 தடை உத்தரவு மற்றும் தொலைபேசி, இணையதள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
தொடர்ந்து, காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவியதையடுத்து, தடை உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் படிபடிப்பாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜம்மு- காஷ்மீர் ராஜோரி மாவட்டத்தில் 15 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
newstm.in
newstm.in