ஜம்மு காஷ்மீர்- துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர் வீரமரணம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுடான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் வீரமரணமடைந்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள பிஜ்பெஹரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார்.
உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
newstm.in
newstm.in