ஜம்மு காஷ்மீர்- 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் ஏற்பட்ட துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் இந்திய நிலைகள் மீது அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் உள்ள கோபால்புரா பகுதியில் இன்று காலை முதல் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
newstm.in
newstm.in