ஹெல்மெட் விவகாரம்: கிரண் பேடி மீது புகார்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Oct 20, 2019, 19:43 IST
| புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தலைக்கவசம் அணியாமல் பிரச்சாரம் மேற்கொண்டதை குறிப்பிட்டு, காவல்துறை தலைவர் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் இருசக்கரவானத்தில் சென்றதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர் கூட்டமைப்பு சார்பில் காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Newstm.in
newstm.in