உத்தரகண்ட்டில் மிக கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
உத்தரகண்டில் மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Aug 20, 2019, 02:30 IST
| உத்தரகண்டில் மேலும் இரண்டு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக கனமழை பெய்த நிலையில், இரண்டு நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது . இதனால் முக்கிய சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, ஆங்காங்கே சாய்த்தாள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த மாநிலத்தில், மேலும் இரு நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
newstm.in
newstm.in