மும்பையில் தொடரும் கனமழை: வீதிகளில் வெள்ளப்பெருக்கு
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த சில நாட்களாக மிக கனத்த மழை பெய்து வருகிறது. இதன் உச்சமாய், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது பெய்த மிக கனத்த மழையால், வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Sep 8, 2019, 00:30 IST
| மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த சில நாட்களாக மிக கனத்த மழை பெய்து வருகிறது. இதன் உச்சமாய், நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்தது பெய்த மிக கனத்த மழையால், வீதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இடுப்பளவு தண்ணீரில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகனங்களை இயக்க முடியாமல் தவிக்கின்றனர். மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நீண்டதூர ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை புறநகர் பகுதிகளிலும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in